ரூ. 50 லட்சம் மதிப்புள்ள போலி மருந்து பறிமுதல்
சென்னை:
ஜாம்பியா நாட்டுக்கு கடத்தப்பட இருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள போலி மருந்து பறிமுதல் செய்யப்பட்டது.தமிழ்நாடு போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் இதை பறிமுதல் செய்தனர்.
கடந்த 14ம் தேதி, சென்னை அருகே உள்ள போரூரில் இன்டெர்மெட் என்ற மருந்து நிறுவனத்தில் அதிகாரிகள்நடத்திய சோதனையின் போது மூவேட் கிரீம் என்ற மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இத்தாலி நாட்டு நிறுவனம் தான் இந்த கிரீமை தயாரித்து வருகிறது. ஆனால், அந்த நிறுவனத்தின் பெயரில்போலியாக மருந்தை உற்பத்தி செய்து அதை ஜம்பியாவுக்கு ஏற்றுமதி செய்துவந்துள்ளது இன்டெர்மெட் நிறுவனம்.
மேலும், சோமிடோன் என்ற வைட்டமின் மாத்திரைகளையும் சட்ட விரோதமாக தயாரித்து வந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பார்வையிட்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், அந்தக் நிறுவனத்தின்உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
யு.என்.ஐ.