For Daily Alerts
Just In
பா.ம.க. எம்.எல்.ஏவின் பெட்ரோல் பங்கில் பட்டப் பகலில் கொள்ளை
சென்னை:
சென்னை அருகே பட்டப் பகலில் பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏவுக்கு சொந்தமானபெட்ரோல் பங்கில் ஊழியர்களை தாக்கி ரூ 65,000 பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
போரூர் -குன்றத்தூர் சாலையில் சரத் ஏஜென்சீஸ் என்ற பெட்ரோல் பங்க் உள்ளது.இதன்உரிமையாளர் செந்தில்குமார். இவர் பா.ம.க. எம்.எல்.ஏ. சண்முகத்தின் மகன்.
திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் 5 பேர் கொண்ட கும்பல் இங்கு வந்தது.இவர்களில் 2 பேர் வெளியில் நின்று கொண்டனர். மற்ற 3 பேரும் உள்ளே சென்று கேஷியர்மற்றும் ஊழியர்களைத் தாக்கி ரூ 65,000 பணத்தை பறிததுக் கொண்டனர். பின்அனைவரும தப்பி ஓடினர்.
காயமடைந்த கேஷியர் மற்றும் ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பட்டப் பகலில் நடந்த இந்தக் கொள்ளை அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]