ஜெ. தான் காரணம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை:என் நண்பர் ரமேஷ் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதற்கு ஜெயலலிதாவும் போலீசும் தான் காரணம்என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
நேற்று (திங்கள்கிழமை) குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சென்னை மாநகராட்சி காண்ட்ராக்டரும் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய நண்பருமான ரமேஷின் இறுதிச் சடங்கு மாலை 6.30 மணிக்கு அண்ணா நகரில் நடந்தது.
அதில் மேயர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா மற்றும் எம்.எல்.எ. பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க பேசிய ஸ்டாலின்,
தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் போலீசும் போட்ட பொய் வழக்குகள்தான் என் நண்பரின் தற்கொலைக்குகாரணம். இதற்கு அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும்.
ஒருவித உள்நோக்கத்துடன் கமிஷனர் முத்துக்கருப்பன் இந்தத் தற்கொலை பற்றி தவறான தகவல்களைக்கொடுத்துள்ளார். விசாரிக்கட்டும், உண்மை வரும்.
காலம் ஒரு நாள் நிச்சயம் பதில் சொல்லும். இவ்வாறு மேயர் ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications