ஆக்ரா பேச்சுவார்த்தை: நாளை அனைத்துக் கட்சி கூட்டம்
டெல்லி:
ஆக்ரா பேச்சுவார்த்தை சம்பந்தமான அனைத்துக் கட்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
பிரதமர் வாஜ்பாயும், பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பும் இந்த 2 நாட்களிலும் 4 முறை பேசியும்,பேச்சுவார்த்தை எந்தவிதமான பலனையும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
முஷாரப்பும் மிகவும் சோகமான முகத்துடன்தான் இஸ்லாமாபாத் போய்ச் சேர்ந்தார் என்று கூறப்படுகிறது.
ஆக்ரா பேச்சுவார்த்தைக்குப் பெரும்பாலான அரசியல் கட்சிகள் எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.இது வரவேற்கத் தகுந்த ஒன்றுதான் என்றே அரசியல் கட்சிகள் கூறி வந்தன.
ஆனாலும், பேச்சுவார்த்தைக்கு முறையாக எதுவும் தயார் செய்யாமல் போனதால்தான், பேச்சுவார்த்தைதோல்வியுற்றது என்று காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மத்திய அரசைக் குற்றம் சுமத்தி வருகின்றன.
இதுகுறித்து, மத்திய அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவை மத்திய அரசைவலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில், ஆக்ரா பேச்சுவார்த்தை பற்றி அரசியல் கட்சிகளிடம் விளக்குவதற்காக, அனைத்துக் கட்சிக் கூட்டம்வியாழக்கிழமை நடைபெறவிருக்கிறது.
ஆக்ரா பேச்சுவார்த்தையின்போது நடந்தவற்றை அனைத்தையும் இக்கூட்டத்தில் எதிர்க்கட்சிகளிடம் விளக்கிக்கூறவுள்ளார் வாஜ்பாய்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications