For Daily Alerts
Just In
சென்னையில் 2 பஸ்கள் எரிந்தன - 2 பேர் காயம்
சென்னை:
சென்னையில் மர்மமான முறையில் 2 பஸ்கள் எரிந்து சாம்பலாயின. இச்சம்பவத்தில் 2 பேர் தீக்காயமடைந்தனர்.
இந்தத் தீ அருகில் உள்ள வேறொரு பஸ்ஸையும் விரைவில் பற்றிக் கொண்டது. இதனால் இந்த 2 பஸ்களும்முழுவதுமாக எரிந்து சாம்பலாயின.
இந்தச் சம்பவத்தில் ஒரு பஸ் டிரைவரும் வேறொரு ஊழியரும் தீக்காயமடைந்தனர். அவர்கள் 2 பேரும் தற்போதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தப் பணிமனையில் உள்ள மற்ற பஸ்களுக்கும் தீ பரவுவதற்கு முன்னர், அவற்றை பணிமனை ஊழியர்கள்வேகமாக அப்புறப்படுத்தி விட்டனர். இதனால் மற்ற பஸ்கள் "காப்பாற்றப்"பட்டன.
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்வரன் சிங் உடனடியாக சம்பவ நடத்திற்குச் சென்றுதீப்பிடித்த சம்பவம் பற்றி விசாரித்தார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை செய்து வருகின்றனர்.
Story first published: Monday, May 7, 2001, 5:30 [IST]