For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் 2 பஸ்கள் எரிந்தன - 2 பேர் காயம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் மர்மமான முறையில் 2 பஸ்கள் எரிந்து சாம்பலாயின. இச்சம்பவத்தில் 2 பேர் தீக்காயமடைந்தனர்.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் அடையாறு பணிமனையில், புதன்கிழமை ஒரு பஸ்ஸில் மர்மமானமுறையில் தீப்பற்றிக் கொண்டது.

இந்தத் தீ அருகில் உள்ள வேறொரு பஸ்ஸையும் விரைவில் பற்றிக் கொண்டது. இதனால் இந்த 2 பஸ்களும்முழுவதுமாக எரிந்து சாம்பலாயின.

இந்தச் சம்பவத்தில் ஒரு பஸ் டிரைவரும் வேறொரு ஊழியரும் தீக்காயமடைந்தனர். அவர்கள் 2 பேரும் தற்போதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தப் பணிமனையில் உள்ள மற்ற பஸ்களுக்கும் தீ பரவுவதற்கு முன்னர், அவற்றை பணிமனை ஊழியர்கள்வேகமாக அப்புறப்படுத்தி விட்டனர். இதனால் மற்ற பஸ்கள் "காப்பாற்றப்"பட்டன.

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்வரன் சிங் உடனடியாக சம்பவ நடத்திற்குச் சென்றுதீப்பிடித்த சம்பவம் பற்றி விசாரித்தார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X