For Daily Alerts
Just In
மதுரையில் சாராயம் காச்சிய கும்பல் பிடிபட்டது
மதுரை:
மதுரை மாவட்டம் மலைப்பகுதி கிராமங்களில் கள்ளச் சாராயம் காய்ச்சிய கும்பல் பிடிபட்டது.
இருப்பினும், கள்ளத்தனமாக இந்த வேலைகள் கடந்து கொண்டுதான் இருக்கின்றன. பலபேர் இதையே தங்கள்குலத்தொழிலாகக் கொண்டுள்ளனர்.
தடையை மீறி இவர்கள் "குடிமகன்"களுக்கு சாராய விநியோகம் செய்தும் வருகின்றனர்.
புதன்கிழமை கரிசல்குளம் மற்றும் ஈச்சம்பாளையம் பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசுக்குத் தகவல்வந்தது. இதையடுத்து கள்ளச் சாராயத் தடுப்பு படை அப்பகுதியில் நடத்திய அதிரடி சோதனையின்போது, சாராயம்காய்ச்சிய கும்பலை மடக்கிப் பிடித்தனர்.
போலீசார் அவர்கள் மீது மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
முன்னதாக, அவர்கள் வைத்திருந்த சாராயக் கேன்கள், பானைகள் ஆகியவற்றை போலீசார் உடைத்தெறிந்தனர்.
Story first published: Saturday, May 12, 2001, 5:30 [IST]