கருணாநிதியை கைது செய்த போலீஸார் பெயர் பட்டியல் கோர்ட்டில் தாக்கல்
சென்னை:
கருணாநிதி கைது விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியல் புதன்கிழமை கோர்ட்டில்தாக்கல் செய்யப்பட்டது.
இத்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலமை நீதிபதிகள் என்.கே. ஜெயின் மற்றும் நீதிபதி தங்கவேலுஅடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் கருணாநிதி கைது விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெயர் பட்டியலைதாக்கல் செய்யும்படி வக்கீல் புருஷோத்தமனுக்கு உத்தரவிட்டது.
இதன்படி கருணாநிதி கைது விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிள் பட்டியலை புருஷோத்தமன்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். போலீசார் பெயர்கள்:
1. முகமது அலி - டி.ஐ.ஜி, சி.பி.சி.ஐ.டி
2. ஜார்ஜ் - துணை கமிஷனர்
3. சண்முக ராஜேஸ்வரன் - துணை கமிஷனர்
4. சாரங்கன் - முதல்வர், போலீஸ் பயிற்சி கல்லூரி
5. இளங்கோவன் - டி.ஐ.ஜி.
6. காந்திராஜன் - டி.ஐ.ஜி.ரயில்வே
7. மவுரியா - ஏ.ஐ.ஜி.
8. அலெக்சாண்டர் மோகன் - ஏ.ஐ.ஜி.
9. ரவி - எஸ்.பி. ரயில்வே
10. முருகேசன் - எஸ்.பி.
11. ராமசுப்ரமணியன் - 3வது பட்டாலின் கமாண்டன்ட்
12. ராஜேந்திரன் - எஸ்.பி
13. சுந்தரமூர்த்தி - எஸ்.பி.
14. ஸ்ரீதர் - துணை கமிஷனர்
15. கிறிஸ்டோபர் நெல்சன் - துணை கமிஷனர்
16. பிரபாகரன் - துணை கமிஷனர் (குற்றம்)
17. பத்மநாபன் - டி.எஸ்.பி.
18. ஆபேஸ்குமார் - துணை கமிஷனர்
19. சந்தீப் பாவ் சாத்தூர் - துணை கமிஷனர் (போக்குவரத்து)
20. முருகேசன் - உதவி கமிஷனர்.
இந்த பட்டியலை சமர்பித்த புருஷோத்தமன் கருணாநிதியை தாக்கிய போலீசார் குழு குறித்த முழு விவரங்களும்தமிழக தலைைமைச் செயலாளர்ருக்கும், உள்துறைச் செயலாளருக்கும் தெரியும் என கூறினார்.
இதை அடுத்து நீதிபதிகள் இது பற்றி 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக தலைமைச்செயலாளருக்கும், தமிழக உள்துறைச் செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டனர்.
தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளருக்கு நோட்டீஸ்:
முன்னாள் முதல்வரும், தி.மு.க.தலைவருமான கருணாநிதி கைது செய்யப்பட்ட போது சட்டவிரோதமாக நடந்துகொண்ட போலீசர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில்,பதிலளிக்குமாறு தமிழக தலைமை செயலாளர், தமிழக உள்துறை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பசென்னை உயர் நீதிமன்றம் முதல் டிவினஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications