ரேஷன் கடை வெள்ளிக்கிழமை விடுமுறைக்கு தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரேஷன் கடைகள் ஞாயிற்றுக்கிழமை இயங்கும் என தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகள் ஞாயிற்றுக்கிழமை இயங்கும்.ரேஷன் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை என்று கடந்த 12ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இது 20ம்தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து நுகர் பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்கத் தலைவர் பிச்சை முத்து சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சட்டத்திற்கு மாறானது. மேலும், முன்னறிவிப்பு எதுவும் இல்லாமலேயேஇந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசின் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்என பிச்சை முத்து தனது மனுவில் கோரி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிராஜபாண்டியன், அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து, வெள்ளிக்கிழகை ரேஷன்கடைகள் வழக்கம் போல் செயல்படும் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+