மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: அஜித் சிங் அமைச்சராகிறார்
டெல்லி:
இந்திய மத்திய அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை விரிவுபடுத்தப்படுகிறது.
உ.பியில் சட்டசபைத் தேத் தேர்ேதலில் பா.ஜ.க.-ராஷ்ட்ரீய லோக் தளம் கூட்டணி அமைத்துப் போட்டியிடத்திட்டமிட்டுள்ளன. இதன் முதல்கட்டமாக அஜித் சிங்கை மத்திய அமைச்சராக்குகிறார் பிரதமர் வாஜ்பாய்.
முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் மகனான அஜித் சிங், அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்தவர்.ராஜிவ் காந்திக்கு எதிராக வி.பி.சிங் நடத்திய போபர்ஸ் யுத்தத்தின்போது வி.பி. சிங்குக்கு ஆதரவாக செயல்படஇந்தியா திரும்பினார் அஜித் சிங்.
அப்போது நடந்த தேர்தலில் வி.பி.சிங்-பா.ஜ.க. கூட்டணி வெல்ல, அஜித் சிங் விவசாயத்துறை அமைச்சரானார்.
இப்போதும் அவருக்கு விவசாயத்துறை வழங்கப்படும் எனத் தெரிகிறது.
அதேபோல மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அஜித் பாஞ்சாவுக்கும்மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்து தரப்படும் எனத் தெரிகிறது.
இவர்கள் தவிர சில இணை அமைச்சர்களும் பதவியேற்பர்.
மத்திய கேபினட் அமைச்சர்களாக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், மம்தா பானர்ஜி இருவரும் தெகல்கா டாட் காம்வெளியிட்ட ஊழல் விவகாரத்தை அடுத்து மத்திய அமைச்சரவையிலிருந்து விலகினர். அதற்குப் பிறகு இப்போதுதான் மத்திய அமைச்சரவை விரிவுபடுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications