For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாயுடு கடிதத்தை ஆதாரமாக காட்டுகிறார் கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்திற்கு கிருஷ்ணா நதிநீர் வந்தது தன் முயற்சியால் தான் என கருணாநிதிகூறியுள்ளதை ஜெயலலிதா மறுத்துள்ளார். ஆனால் கிருஷ்ணா நதிநீர் வந்தது தன்முயற்சியால்தான் என்றும், அதற்கு ஆதாரமாக ஆந்திர முதல்வர் கடிதத்தையும்காட்டினார் கருணாநிதி.

சென்னையில் நிலவி வரும் கடும் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க ஆந்திராவில் இருந்துகிருஷ்ணா நதிநீர் வந்துஉள்ளது. இந்த நீர் ஆந்திராவின் கண்டலேறு நீர்தேக்கத்தில்இருந்து திறந்து விடப்பட்டது.

இது தான் மேற்கொண்ட தொடர் முயற்சியால் தான் சாத்தியமானது என்று ஜெயலலிதாகூறி வருகிறார். கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு வந்தது தன் முயற்சியால்தான் என்றுகூறினார் கருணாநதி.

பத்திரிக்கை மூலம் சந்திரபாபுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார். இதை ஜெயலலிதாமறுத்து கருணாநிதி மக்களை திசை திருப்பி அரசியல் ஆதாயம் தேடுவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

சென்னையில் உள்ள தி.மு.க. தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில்செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜெயலலிதா தன் முயற்சியால்தான் கிருஷ்ணா நதிநீர் வந்ததாக கூறி வருகிறார்.கிருஷ்ணா நதிநீர் திறந்து விடுவது குறித்து எனக்கு சந்திரபாபு நாயுடு எழுதியுள்ளகடிதத்தை பாருங்கள்.

இந்த கடிதத்தில் இருப்பது அவரது கையெழுத்துதானா என்பதையும் பாருங்கள் என்றுகூறி சந்திரபாபு எழுதிய கடிதத்தை காட்டினார்.

இதன் மூலம் உண்மை விளங்கும் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X