ரமேஷின் தற்கொலை கடிதத்தை கேட்கிறது மனித உரிமைக் கமிஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட ஸ்டாலினின் நண்பர் ரமேஷ் எழுதிய கடிதங்களை உடனடியாகதன்னிடம் சமர்பிக்க வேண்டும் என தமிழக காவல்துறைக்கு மனித உரிமைக் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நகர காவல்துறை கமிஷ்னர் முத்துக் கருப்பனுக்கு மனத உரிமைக் கமிஷன் அனுப்பியுள்ள உத்தரவில்,ரமேஷ் வீட்டில் போலீசார் கைப்பற்றிய கடிதங்களை உடனடியாக மனித உரிமைக் கமிஷனுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனை:

அதே போல ரமேஷ், அவரது மனைவி மற்றும் அவர்களின் குழந்தைகளின் உடல்களை பிரேதப் பரிசோதனைசெய்யப்பட்ட கீழ்பாக்கம் மருத்துவனைக் கல்லூரியின் டீனுக்கும் மனித உரிமைக் கமிஷன் ஒரு உத்தரவுஅனுப்பியுள்ளது.

அதில், பிரேதப் பரிசோதனை அறிக்கையையும் பரிசோதனை செய்தபோது எடுத்த வீடியோ ஆதரங்களையும்தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மனித உரிமைக் கமிஷன் கூறியுள்ளது.

ரமேஷ் குடும்பத்தின் தற்கொலையில் பல மர்மங்கள் இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இவர் சென்னைமேயர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல, ஸ்டாலினின் நட்பைப் பயன்படுத்தி பல மாநகராட்சிகாண்ட்ராக்ட்களை பிறர்க்கு பெற்றுத் தந்தவர்.

கோடிக்கணக்கில் இவரிடம் பணம் புரண்டுள்ளது. ஸ்டாலின் மீது ஊழல் புகார்களைக் கூறியுள்ள தமிழக போலீசார்,ரமேஷை அப்ரூவர் ஆக்கி அவரை வைத்தே ஸ்டாலினுக்கு எதிராக சாட்சியம் வாங்க முயற்சித்து வந்தனர். அவரைபோலீஸ் மிரட்டி வந்ததாககவும் அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் திமுகவினர்கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+