பெண் சிசு கொலை: தந்தை-பாட்டி கைது
இடைப்பாடி:
சங்ககிரி அருகே உள்ள இடைப்பாடி-செட்டிமாங்குறிச்சி கிராமத்தில் பெண் சிசுவின் பிணம் தோண்டிஎடுக்கப்பட்டது. இது தொடர்பாக அக்குழந்தையின் தந்தை, பாட்டி கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மீண்டும் கர்ப்பமடைந்த பழனியம்மாளுக்கு, கடந்த 17ம் தேதி, ஒரு அழகான பெண் குழந்தைபிறந்தது.
ஆண் குழந்தையை எதிர்பார்த்த அவர்களுக்கு இதனால் ஏமாற்றம் ஏற்பட்டது. எனவே, அந்தப் பெண்குழந்தையைக் கொலை செய்ய அவர்கள் முடிவு செய்தனர்.
பின்னர், ஈரத் துணியால் அக்குழந்தையின் முகத்தில் அழுத்திக் கொலை செய்தனர். பிறகு, அவர்களுடைய நிலத்தில்அக்குழந்தையைப் புதைத்தனர்.
இதுபற்றிய தகவல், கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குத் தெரிய ஆரம்பித்ததும், கிராம நிர்வாகியிடம் சரணடைந்து,கொலை செய்தது பற்றி வாக்குமூலமும் அளித்தார் பழனிமலை.
இதைத் தொடர்ந்து, சங்ககிரி போலீசார், குழந்தையின் பிணத்தைத் தோண்டி எடுத்து, இது தொடர்பான வழக்குஒன்றைப் பதிவு செய்தனர்.
இக்கொலைக்குக் காரணமான பழனிமலையின் தாயையும் போலீசார் கைது செய்தனர். குழந்தையின் தாயைப்போலீசார் தேடி வருகின்றனர்.