நினைவகம்: அரசு அனுமதி இல்லை
சென்னை:
சிவாஜிக்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்குமாறு நடிகர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையை உடனடியாக ஏற்கமுடியாத நிலை குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து, தென் இந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக, அதன் தலைவர் விஜயகாந்த் தமிழக அரசுக்கு மனு ஒன்றைஞாயிற்றுக்கிழமை அளித்தார்.
சிவாஜிக்கு நினைவிடம் அமைப்பதற்கு அரசு இடம் கொடுக்க வேண்டும. சிவாஜியின் பிறந்த நாளை நடிகர்கள்தினமாக அறிவிக்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் அந்த மனுவில் இடம் பெற்று இருந்தன.
இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு வரை சிவாஜியின் உடலை எங்கு தகனம் செய்வது என்பது பற்றி முடிவுசெய்யப்படமாலே இருந்தது.
இது தொடர்பாக விஜயகாந்த் கூறுகையில், தமிழக அரசிடம் சிவாஜிக்கு நினைவிடம் அமைக்க இடம் கேட்டுஇருக்கிறோம். இதற்கு அரசிடம் இருந்து பதில் வந்த பின்புதான், அவரது உடலை அடக்கம் செய்யும் இடம் முடிவுசெய்யப்படும். தமிழக அரசு இடம் ஒதுக்க மறுத்தால், பெசன்ட் நகரில் இருக்கும் மின்சார தகன மையத்தில்சிவாஜியின் உடல் தகனம் செய்யப்படும் என்றார்.
இந் நிலையில் நடிகர் சங்கத்தின் கோரிக்கையை தற்போதைக்கு ஏற்க முடியாது என்று தமிழக அரசுஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்தது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுஇருப்பதாவது:
மறைந்த நடிகர் நடிகர் திலகம் சிவாஜியின் வீட்டிற்கு முதல்வர் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு சென்றார்.சிவாஜியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அவர் அஞ்சலி செலுத்தினார்.
அப்போது நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் கோரிக்கை மனுவை முதல்வரிடம் கொடுத்தார். அதில் சிவாஜியின்நினைவைப் போற்றும் விதமாக அவருடைய உடலை தகனம் செய்து நினைவிடம் அமைக்க உரிய இடம்ஒதுக்கித்தருமாறு அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.
சென்னையில் சில பொது இடங்களில் நினைவகம் வைக்க நீதிமன்றத்தடை உள்ளது.
மறைந்த தலைவர் நெடுஞ்செழியனுக்கு நினைவகம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வது பற்றி ஏற்கனவேஅரசு பரிசீலனை செய்து வருகிறது.
அந்த இடத்தை தேர்வு செய்யும்போது, மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கும் நினைவகம் அமைக்க உரியஇடத்தை ஒதுக்க அரசு பரிசீலனை செய்யும் என்று முதல்வர் தெரிவித்து உள்ளார் என்று அந்த அறிக்கையில்கூறப்பட்டு உள்ளது.