For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று கூடுகிறது நாடாளுமன்றம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை ஆரம்பமாகிறது.

கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட நேபாள மன்னர் குடும்பத்தினருக்கும், மறைந்த முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்படும். அதற்குப் பின்னர் நாடாளுமன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமைக்குஒத்திவைக்கப்படும்.

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஆக்ராவில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு முதல் முறையாகநாடாளுமன்றம் கூடுகிறது. இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பான விவாதமும் இக்கூட்டத் தொடரில் விவாதிக்கப்படஉள்ளது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை காலை கேள்வி நேரம் முடிந்த பிறகு, ஆக்ரா பேச்சுவார்த்தை பற்றி பிரதமர் வாஜ்பாய் விரிவானஅறிக்கையைத் தாக்கல் செய்கிறார். நாடாளுமன்றத்திலும், டெல்லி மேல் சபையிலும் இந்த அறிக்கை மீதானவிவாதங்கள் நடைபெறும்.

ஏற்கனவே நிலுவையில் உள்ள 11 மசோதாக்கள் தவிர, மேலும் 12 புதிய மசோதாக்கள் இந்தக் கூட்டத் தொடரில்தாக்கல் செய்யப்பட உள்ளன. விவசாயிகள் உரிமை மசோதா, மத்திய கண்காணிப்பு கமிஷன் மசோதா, அரசியல்சட்ட 85வது திருத்த மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற அரசு தற்போது தயாராக இருக்கிறது.

வங்கிகளைத் தனியார் மயமாக்க வகை செய்யும் மசோதாவும் தாக்கல் செய்யப்படவுள்ளது. வங்கிகள் தனியார்மயமாவதைக் கண்டித்து ஏற்கனவே வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். மேலும்அவர்கள் வரும் 25ம் தேதி நாடாளுமன்றத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

ஆக்ரா பேச்சுவார்த்தை தவிர, யூ.டி.ஐ. பிரச்சினை, மணிப்பூர் கலவரம், முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதிமற்றும் 2 மத்திய அமைச்சர்களின் கைது விவகாரம் ஆகிய சம்பவங்கள் பற்றியும் சூடான விவாதங்கள் நடத்தஎதிர்க்கட்சியான காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது.

இச்சம்பவங்களை எழுப்பி, மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்தீவிரம் காட்டி வருகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X