காவிரி: "நடுவர் நீதிமன்றத் தீர்ப்பு உடனே தேவை"
திருச்சி:
காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட நடுவர் நீதிமன்றம் உடனடியாக தன்னுடைய தீர்ப்பைவழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழக செயலாளர் ஆர்.நல்லக்கண்ணு தமிழக அரசைக் கோரியுள்ளார்.
இந்தியாவின் தெற்குப் பகுதிகளில் பாய்ந்து கொண்டிருக்கும் நதிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும்முயற்சியிலும் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைச் செய்தாலே போதும், தென்னகமாநிலங்களின் தண்ணீர்ப் பிரச்சனையைச் சமாளித்து விடலாம்.
சென்னை மக்களுக்குத் தற்போது கிருஷ்ணா நீர் கிடைத்துவிட்டது என்ற அளவிலே திருப்திப் பட்டுக் கொள்ளவேண்டும். இதை விட்டுவிட்டு, தற்போது கிருஷ்ணா நீரை யார் கொண்டு வந்தது என்று கருணாநிதியும்ஜெயலலிதாவும் போட்டி அறிக்கைகளை விட்டுக் கொண்டிருப்பது நல்லதல்ல.
சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில், குடிநீர் கேட்டுப் போராடி, கைது செய்யப்பட்ட எங்கள் கட்சியைச் சேர்ந்த445 பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பதால், இவர்கள்மேல் தொடரப்பட்ட வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற அரசு உத்தரவிட வேண்டும் என்றார் நல்லகண்ணு.












Click it and Unblock the Notifications