வீராணம் ஏரி ஊழல்: மாஜி அமைச்சர் தப்பினார்
சென்னை:
வீராணம் ஏரியைத் தூர் வாரியதில் ஊழல் நடந்ததாகக் கூறப்பட்ட புகாரை சென்னை செஷன்ஸ் கோர்ட்திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
அதில் செலவு செய்யப் பட்ட ரூ.110 கோடியில், ரூ.6 கோடியே 15 லட்சம் வரை 2 அமைச்சர்கள் உட்பட 4 பேர்ஊழல் செய்ததாகவும், லஞ்ச ஒழிப்புப் போலீசாரை இதுபற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த முதன்மை செஷன்ஸ் நீதிபதி அசோக்குமார் அதைத் தள்ளுபடி செய்தார்.
இதுபற்றி அவர் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
முதலில் லஞ்ச ஒழிப்புப் போலீசில் தான் புகார் கொடுத்திருக்க வேண்டும், அதன் பிறகு தேவைப்பட்டால் தான்கோர்ட்டுக்கு வர முடியும்.
மேலும், புகார் கொடுத்தவரும் சாட்சிகளும் கடலூரைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இது இக்கோர்ட்டின்எல்லை வரம்புக்கு அப்பாற்பட்டதாகும்.
இக்காரணங்களினால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார் நீதிபதி அசோக்குமார்.












Click it and Unblock the Notifications