போயஸ்தோட்ட பண விவகாரம்: வழக்குக்கும் தி.மு.கவுக்கும் தொடர்பில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தன் கணவர் மீதான இரண்டு வழக்குகளும் பொய்யானவை, எனவே அந்த வழக்குகளைரத்து செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை தொழிலதிபர் சலாவுதீனின் மனைவி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததற்கும் தி.மு.கவுக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லைஎன்று தி.மு.க.தலைவர் கருணாநிதி கூறி உள்ளார்.

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சலாவுதீன் மீதும் அவரது தம்பி மொய்தீன் மீதும்போதைப் பொருள் வைத்திருந்ததாக வழக்கு போடப்பட்டிருந்தது. அவை பொய்யானவழக்குகள் அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று சலாவுதீனின் மனைவி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சலாவுதீனின் மனைவி தன் மனுவில் கூறியிருப்பதாவது:

சென்ற 1ம் தேதியில் இருந்த 6ம் தேதி வரை முதல்வர் ஜெயலலிதாவின் துணைச்செயலாளர்களாக இருக்கும் நடராஜன், சந்திரமோகன் ஆகிய ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளிடம்என் கணவர் தொலைபேசியில் பேசி உள்ளார்.

இந்த வழக்குகளை விசாரித்து வரும் துணை கமிஷனர் ராஜேந்திரனுடனும் என் கணவர்தொலைபேசி உள்ளார். அப்போது அவர்கள் வழக்குகள் பொய்யானவை என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் சுதாகரனும், சலாவதீனும் எடுத்துச் சென்றநகைகள், பணத்தைக் கொடுத்துவிட்டால் வழக்கில் இருந்து சலாவுதீனை விடுவிப்பதாகவுமகூறியுள்ளனர்.

சலாவதீனிடம் அவர்கள் 57 லட்சம் கொடுக்குமாறும் கேட்டுள்ளனர். இந்தத் தொலைபேசிபேச்சு டேப் செய்யப்பட்டுள்ளது. அதுவும் இந்த மனுவுடன் தாக்கல் சமர்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தப் பணத்தை சுதாகரன் தான் எடுத்துச் சென்றார். என் கணவர் எடுக்கவில்லை.

இந்த நிலையில் தான் என் கணவர் மீதும் அவரது தம்பி மீதும் போதைப் பொருள்வைத்திருந்ததாக ஜெயலலிதா வழக்குப் போட்டுள்ளார்.

நான் சமர்பித்துள்ள டேப் ஆதாரத்தைக் கேட்டால் முழு உண்மையும் தெரிய வரும். என்கணவர் மீது போடப்பட்ட வழக்குகள் பொய்யானவை. எனவே அந்த வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட இந்த மனுவின் பின்னணியில் தி.மு.க இருக்கிறது எனஜெயலலிதா குற்றம் சாட்டி இருந்தார். இதை மறுத்து சென்னையில் புதன்கிழமை கருணாநிதிவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதா பத்திரிக்கையாளர் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை கூறுகையில் சென்னைதொழிலதிபரின் மனைவி தாக்கல் செய்துள்ள மனுவின் பின்னணியில் தி.மு.கவும் உள்ளது.

இந்த அரசுக்கும் எனக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கருணாநிதிசெயல்படுகிறார் என்று கூறியிருந்தார் இது முற்றிலும் தவறான கருத்து.

சலாவுதீனின் மனைவி தாக்கல் செய்த மனுவுக்கும் தி.மு.கவுக்கும் எந்த விதமான தொடர்பும்கிடையாது என்று கூறி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+