சிவகங்கை அருகே பட்டப்பகலில் வங்கிக் கொள்ளை: 3 பேர் பிடிபட்டனர்
இளையான்குடி:
இளையான்துடியில் பட்டப்பகலில் வங்கிக் கொள்ளை நடந்தது. கொள்ளையில்ஈடுபட்ட 3 பேரை பொது மக்களே விரட்டிப் பிடித்தனர். மேலும் 3 கொள்ளையர்கள்தப்பிவிட்டனர்,
இந்த கும்பல் திங்கள்கிழமை காலை வங்கிக்குள் நுழைந்து, வங்கி ஊழியர்களைதுப்பாக்கி முனையில் மிரட்டி 16 பவுன் நகையையும், ரூ 6,500யையும்கொள்ளையடித்து தப்பிச் சென்றது.
தப்பிச் செல்லும்போது கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் அந்த வழியாக சென்றுகொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்து 5 பவுன் சங்கிலியையும் பறித்து விட்டுபறந்தார்.
இதற்குள் உஷாரான பொதுமக்கள் கொள்ளைக் கும்பலை துரத்திச் சென்று 2 பேரைபிடித்தனர். இந்நிலையில் கொள்ளைச் சம்பவம் குறித்து செய்தி கேட்டு அங்கு வந்தஇளையான்குடி டி.எஸ்.பி. கொள்ளையர்களை துரத்திச் சென்றார். அவர் வானத்தில்சுட்டு மிரட்டி கொள்ளையர்களில் ஒருவரை பிடித்தார்.
இவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 கொள்ளையர்கள்தப்பிவிட்டனர். இவர்களைத் தேடும் பணி தொடர்கிறது.