For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவகங்கை அருகே பட்டப்பகலில் வங்கிக் கொள்ளை: 3 பேர் பிடிபட்டனர்

By Staff
Google Oneindia Tamil News

இளையான்குடி:

இளையான்துடியில் பட்டப்பகலில் வங்கிக் கொள்ளை நடந்தது. கொள்ளையில்ஈடுபட்ட 3 பேரை பொது மக்களே விரட்டிப் பிடித்தனர். மேலும் 3 கொள்ளையர்கள்தப்பிவிட்டனர்,

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் உள்ள ஆரம்ப விவசாய கூட்டுறவுவங்கியில் திங்கள்கிழமை 6 பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் தன் கைவரிசையைக்காட்டியது.

இந்த கும்பல் திங்கள்கிழமை காலை வங்கிக்குள் நுழைந்து, வங்கி ஊழியர்களைதுப்பாக்கி முனையில் மிரட்டி 16 பவுன் நகையையும், ரூ 6,500யையும்கொள்ளையடித்து தப்பிச் சென்றது.

தப்பிச் செல்லும்போது கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் அந்த வழியாக சென்றுகொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்து 5 பவுன் சங்கிலியையும் பறித்து விட்டுபறந்தார்.

இதற்குள் உஷாரான பொதுமக்கள் கொள்ளைக் கும்பலை துரத்திச் சென்று 2 பேரைபிடித்தனர். இந்நிலையில் கொள்ளைச் சம்பவம் குறித்து செய்தி கேட்டு அங்கு வந்தஇளையான்குடி டி.எஸ்.பி. கொள்ளையர்களை துரத்திச் சென்றார். அவர் வானத்தில்சுட்டு மிரட்டி கொள்ளையர்களில் ஒருவரை பிடித்தார்.

இவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 கொள்ளையர்கள்தப்பிவிட்டனர். இவர்களைத் தேடும் பணி தொடர்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X