முதிய பெண்களுக்கு புதிய ரயில் கட்டண சலுகை
டெல்லி:
ரயிலில் பயணம் செய்யும் வயது முதிர்ந்த பெண்கள் கட்டண சலுகை பெறுவதற்கான வயது வரம்பு 60 ஆகநிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய ரயில்வே அமைச்சர் நிதிஷ்குமார் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமைதெரிவித்தார்.
நாட்டிலுள்ள முதியவர்களில் 70 சதவீதம் பேர் இந்த சலுகையை பயன்படுத்துகிறார்கள். தற்போதுள்ள படிவத்தில்பயணிக்கு 65 வயது என்று நிரப்பினால் போதும். தானாகவே, அவர் சலுகை பெற்றுவிடுவார்.
ஆனால் இதை மாற்றி சலுகையைக் கேட்பவருக்கு மட்டுமே அது கிடைக்குமாறு செய்யப் போகிறோம்.
தற்போது பயணக் கட்டணத்தில் வழங்கப்படும் சலுகை 30 லிருந்து 50 சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ளது.
முதியோரிடம் அவர்களின் வயதுச் சான்றிதழைக் கேட்டு பயணச்சீட்டு ஆய்வாளர்கள் துன்புறுத்தியதாக இதுவரைஎனக்குத் தகவல் இல்லை.
மேலும், முதியவருடன் அவருக்குத் துணையாக பயணம் செய்பவருக்கான சலுகை பற்றி நிதிநிலைமையைக்கருத்தில் கொண்டு பிறகு முடிவு செய்யப்படும் என்றார் நிதிஷ்குமார்.












Click it and Unblock the Notifications