சென்னை போலீஸ் கமிஷனரையும் அழைக்கிறது மத்திய அரசு
சென்னை:
முன்னாள் தமிழக டி.ஜி.பியான ராஜகோபாலனை மத்திய அரசு அழைத்ததையடுத்து, சென்னை மாநகர போலீஸ்கமிஷனர் முத்துக்கருப்பனும் மத்திய அமைச்சரவை செயலகப் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஆனால், தேசிய பாதுகாப்புப் படை என்று கருதப்படும் கறுப்பு பூனைப் படையின் தலைவராக மத்திய உள்துறைஅமைச்சகம் நியமித்துள்ளது. ஆனால், இதுவரை தமிழ அரசிடம் இருந்து அவர் விடுபடவில்லை. ஆகஸ்டு 1ம்தேதிக்குள் விடுபடாவிட்டால், அவரிடமிருந்து அப்பதவி கை நழுவிப் போய்விடும்.
இந்நிலையில், மத்திய அமைச்சரவையின் செயலகப் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளார் முத்துக்கருப்பன். இவருடன்டி.ஐ.ஜியாக இருக்கும் ஜார்ஜ் மற்றும் துணை போலீஸ் கமிஷனர் கிறிஸ்டோபர் நெல்சன் ஆகியோரையும் மத்தியஅரசு அழைத்துள்ளது.
இவர்கள் 3 பேரையும் உடனடியாக விடுவித்து, டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்குக் கடிதம்அனுப்பியுள்ளது மத்திய அரசு.
கருணாநிதி கைது சம்பவத்தில் தொடர்புள்ளது மட்டுமல்லாமல், ரமேஷ் குடும்பத்தின் தற்கொலை பற்றியும்தற்போது விசாரித்து வருகிறார் முத்துக்கருப்பன். இந்த நிலையில் அவரை எப்படி விடுவிப்பது என்றும் தமிழக அரசுமுழித்துக் கொண்டிருக்கிறது.
இது தவிர, தமிழகத்தின் முக்கியக் காவல் துறைப் பதவியில் உள்ளவர்களை எப்படி மத்திய அரசு அழைக்கலாம்என்று தமிழக அரசு குழம்பிக் கொண்டிருக்கிறது.
ஆனால், மாநிலத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகளை அழைக்கும் உரிமையும் அதிகாரமும் மத்திய அரசுக்குஉள்ளது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, விரைவில் பரிசீலித்து முடிவெடுக்கவிருப்பதாகத் தமிழக அரசு தற்போது கூறியுள்ளது.
திமுகவின் நிர்ப்பந்தம் காரணமாகவே மத்திய அரசு ஒருவர் பின் ஒருவராக தமிழகத்திலிருந்து போலீசாரைஅழைத்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications