புதிய தமிழகமும் கடும் எதிர்ப்பு
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியை மீண்டும் சேர்த்ததற்கு புதிய தமிழகம் கட்சியும் கடும்எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
அகில இந்திய அளவில் பாமகவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டாலும், மாநில அளவில்சேர்த்துக் கொள்வதற்கு நாங்கள் சில நிபந்தனைகளை விதிப்போம்.
குறுகிய கால இடைவெளியில் இக்கட்சி மீண்டும் கூட்டணிக்கு வந்திருப்பது, பாமகவின் நெறிமுறைகள் மற்றும்ஒழுக்கத்தின் மீது மக்களுக்கு சந்தேகம் எழுப்பியுள்ளது. மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பிறகுதான், தே.ஜ.கூட்டணியில் பாமக சேர வேண்டும்.
தற்போது, மீண்டும் கூட்டணிக்கு பாமக வந்துள்ளதால் புதிய தமிழகம் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் வராது.
வட மாவட்டங்களில் உள்ள வன்னியர்களையும், தென் மாவட்டங்களில் உள்ள தேவேந்திர குலவேளாளர்களையும் ஒருங்கிணைப்பதற்குத்தான் 1998ல் டாக்டர் ராமதாஸ் பாமகவை ஆரம்பித்தார். இதன்மூலம்,தலித் ஓட்டுக்களைப் பெற்று, எம்.எல்.ஏ. பதவிகளையும் பெற்றார்.
1996ம் ஆண்டு வரை, தலித் ஒருவரை முதல்வராக்குவோம் என்று கூறிவந்த ராமதாஸ், பின்னர் உறுதிமொழியைக்கைவிட்டு, தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் என்று கிருஷ்ணசாமிகூறினார்.