For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமதாஸ் முதலில் அறிவாலயத்துக்கு வரட்டும்- கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் முதலில் திமுக தலைமைஅலுவலகத்துக்கு வந்து என்னை சந்திக்கட்டும். அதன் பிறகு அவரை தேசியஜனநாயகக் கூட்டணியில் இணைப்பது பற்றி முடிவு செய்யலாம் என தி.மு.க. தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.

டெல்லியில் நேரடியாக வாஜ்பாயைச் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரமுயன்றார் ராமதாஸ். ஆனால், அவரைச் சேர்க்க தலித் கட்சிகள் எதிர்ப்பதாலும் தன்னைராமதாஸ் மதிக்கவில்லை என திமுக கருதுவதாலும் ராமதாஸ் திரிசங்கு சொர்க்கத்தில்தொங்கிக் கொண்டிருக்கிறார்.

இந் நிலையில் செவ்வாய்க்கிழமை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம்கருணாநிதி பேசுகையில்,

தமிழகத்தில் தி.மு.க.தான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கிறது. எனவேபாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் வந்து என்னை சந்தித்த பின்பு தான்பா.ம.கவை மீண்டும் தே.ஜ. கூட்டணியில் இணைப்பது பற்றி முடிவு எடுக்க முடியும்.

பாட்டாளி மக்கள் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு விடுதலைசிறுத்தைகள் சில நிபந்தனை விதித்து உள்ளது. அது பற்றி கூட்டணிக் கட்சிகளுடன்கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். கூட்டணி கட்சிகள் கூட்டமும் ராமதாஸ் என்னைசந்தித்த பின்புதான் நடைபெறும் என்றார்.

ராமதாஸ் உங்களை சந்தித்தால் பா.ம.கவை, தமிழக தே.ஜ.கூட்டணியில் சேர்த்துக்கொள்வீர்களா என்று நிருபர் ஒருவர் கேட்டதற்கு கற்பனை கேள்விகளுக்கு என்னால்பதிலளிக்க முடியாது என்றார்.

நிருபர்கள் கூட்டத்தின் போது கருணாநிதி தன் சட்டையைக் கழற்றி போலீசார் தன்னைகைது செய்த போது தாக்கியதால் ஏற்பட்ட காயங்களை காட்டினார்.

போலீஸ் தாக்கியதால் தான் கையில் வீக்கங்கள் உள்ளன. தோள்பட்டையிலும் கடும்வலி இருக்கிறது.

நான் வலி காரணமாக இரவில் தூங்க முடியாமல் சத்தம் போட்டு கத்திக் கொண்டுஇருக்கிறேன். என்னைத் தாக்கிய போலீஸ் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஜெயலலிதா அரசுமீது மத்திய அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X