தமிழக செஸ் வீராங்கனைக்கு "அர்ஜூனா விருது"
டெல்லி:
தமிழ செஸ் வீராங்கனை விஜயலட்சுமி உட்பட 16 பேருக்கு மத்திய அரசு "அர்ஜூனா விருது" வழங்குகிறது.
தமிழக செஸ் வீராங்கனையும், இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டருமான விஜயலட்சுமி சுப்புராமன்,கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் உட்பட வெவ்வேறு விளையாட்டுகளில் சாதனை புரிந்த 16 வீரர்களுக்குஅர்ஜூனா விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்கான பரிசுத் தொகை ரூ. 1 லட்சம் ஆகும்.
ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் சாம்பியன் புல்லால கோபிசந்த்துக்கு, நாட்டிலேயே விளையாட்டு வீரர்களுக்குவழங்கப்படும் உயரிய விருதான "ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது" வழங்கப்படுகிறது. பரிசுத் தொகை ரூ. 3 லட்சம்ஆகும்.
மேலும், 5 பேருக்கு துரோணாச்சாரியார் விருதும், 14 முன்னாள் வீரர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும்வழங்கப்படுகிறது.
இதற்கான விழா வரும் 29-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் நடக்கிறது. விருதுகளை ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் வழங்குவார்.












Click it and Unblock the Notifications