கேலி செய்த வாலிபரை அடித்தே கொன்ற பெண்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கிரிக்கெட் விளையாடிய பெண்களைக் கிண்டல் செய்த வாலிபரை, அந்தப் பெண்கள் கிரிக்கெட் மட்டையாலேயேஅடித்துக் கொன்றனர்.

சென்னை அருகேயுள்ள ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா கோவில் பீச்சில் சிலர் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களில் 3 பேர் பெண்கள்.

அப்போது அந்தப் பகுதியிலுள்ள தியேட்டரில் படம் பார்க்க கண்ணன், ஆறுமுகம், செல்வம் ஆகிய 3 வாலிபர்கள்அந்த வழியாக வந்தார்கள். இவர்கள் ஆயிரம் விளக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கிரிக்கெட்விளையாடும் பெண்களைப் பார்த்து கமெண்ட் அடித்துள்ளனர்.

இதைக் கேட்டு அந்த பெண்கள் முதலில் எதையும் கண்டு கொள்ளாமல், அமைதியாக விளையாடிக்கொண்டிருந்தனர். இதன் பின்னர் கிண்டலும் கேலியும் அதிகரிக்க ஆரம்பித்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 3 பெண்கள் உட்பட மொத்தம் 9 பேர் கிரிக்கெட் மட்டையுடன் அந்தவாலிபர்களைத் துரத்த ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் கையில் சிக்கிய அந்த வாலிபர்களை, அந்தப் பெண்கள்மட்டையால் அடித்து நையப்புடைத்தனர்.

அடிதாங்க முடியாமல் சுருண்டு விழுந்த அந்த வாலிபர்கள், பின்னர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டனர்.ஆனால் செல்லும் வழியிலேயே ஆறுமுகம் என்ற வாலிபர் வலிதாங்காமல் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிகழ்ச்சி அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈவ் டீசிங் காரணமாக, கடந்த வாரம் 5 இளைஞர்களையும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளைக் கேலிசெய்ததற்காக நேற்று (வியாழக்கிழமை) 17 இளைஞர்களையும் சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+