மேயரைக் கூப்பிடாமல் நடந்த மதுரை மாநகராட்சி விழா
மதுரை:
மதுரையில் மாநகராட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மேயர் அழைக்கப்படவில்லை. இதனால் மதுரை மேயர்குழந்தைவேலு உள்ளிட்ட திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மாநகராட்சி நடத்திய இந்த விழாவுக்கு மேயர் குழந்தைவேலு அழைக்கப்படவில்லை. அவருக்குப் பதில்மாநகராட்சிக் கமிஷ்னர் லல்லாம் சங்கா கேமராக்களைத் துவக்கி வைத்தார்.
இதையறிந்த திமுகவினர் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளனர்.
திமுக தான் மதுரை மாநகராட்சியில் ஆட்சியில் உள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சி வந்ததில் இருந்து திமுகமேயர்களுக்கு அதிகாரிகள் மரியாதை கொடுப்பது குறைந்துவிட்டது.
சென்னை மேயர் ஸ்டாலின் மாநகராட்சியிலேயே ஒரம் கட்டப்பட்டுவிட்டார். சேலம் திமுக மேயர் சூடாமணிமோசடி போரிங் விவகாரத்தில் சிறைக்குப் போகும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது.
இப்போது மதுரை மேயருக்கே சொல்லாமல் மாநகராட்சி விழா நடந்து முடிந்துவிட்டது.