ரயிலில் ஏ.கே.47: ஹரியானா போலீஸ் சென்னை வருகை
சென்னை:
சென்னை ரயிலில் வந்த ஏ.கே.47 துப்பாக்கிகளைப் பெற்றுக் கொண்டு செல்வதற்காக ஹரியானா மாநில போலீஸ்குழுவினர் சென்னை வந்துள்ளனர்.
டெல்லியிலிருந்து சமீபத்தில் சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ரிசர்வ் செய்யப்படாத பெட்டியில் ஒருசீட்டுக்கு கீழே ஒரு சூட்கேஸ் அனாதையாக கிடந்தது.
அந்த சூட்கேஸை போலீஸார் சோதனையிட்டபோது, அதில் 2 ஏ.கே.47 துப்பாக்கிகள், ஹரியானா மாநிலபோலீஸார் அணியும் யூனிபாரம், பேட்ச், துப்பாக்கிக் குண்டுகள் உள்ளிட்டவை இருந்தன.
இதுகுறித்து ஹரியானா மாநல போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. இந்த நிலையில், இந்த சூட்கேஸை தவறவிட்ட ஹரியானா போலீஸார், பரீதாபாத் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து பரீதாபாத் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு போலீஸ் குழு சென்னை வந்தது.சென்னை போலீஸார் கைப்பற்றியுள்ள பொருட்களை திரும்ப வாங்கிச் செல்வது குறித்து சென்னை போலீசுடன்பேச்சு நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications