விரலைக் கடித்த உயிர் நண்பர்...!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருவள்ளூர் அருகே உள்ள தாமரைப்பாக்கம் என்ற இடத்தில் கறிக் குழும்பு கொடுக்காத ஆத்திரத்தில் நண்பரின் விரலைக்கடித்துத் துப்பினார் உயிர் நண்பர் ஒருவர்.

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரும், புன்னைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த குமாரும்செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர். இருவரும் உயிருக்குயிரான நண்பர்கள்.

வேலைக்கு வந்த குமார் வீட்டிலிருந்து கறிக் குழும்பும், சோறும் எடுத்து வந்திருந்தார். மதிய வேளையில் நண்பர்கள் இருவரும்சாப்பிட அமர்ந்தனர். கறிக்குழம்பைப் பார்த்து நாக்கு ஊறிய கிருஷ்ணன் தனக்குக் கொஞ்சம் தருமாறு கேட்டார்.

ஆனால் தனக்கே கொஞ்சம்தான் இருப்பதாக கூறிய குமார் குழம்பு தர மறுத்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம்ஏற்பட்டது.

தனக்குக் குழம்பு தராத குமாரும் சாப்பிடக் கூடாது என்ற கோபத்தில் குழம்பைத் தட்டி விட்டார் கிருஷ்ணன். இதனால் கோபற்றகுமார் கிருஷ்ணனை அடித்துள்ளார்.

இருவரும் அடிதடியில் இறங்கினர். கட்டி உருண்டனர். கிருஷ்ணன் ஆத்திரத்தில் குமாரின் விரலைக் கடித்துவிட்டார். இதில்குமாரிவின் ஒரு விரலில் கொஞ்சம் வெட்டுப்பட்டு கிருஷ்ணனில் வாயில் வந்துவிட்டது. இதையடுத்து அந்த துண்டு விரலைகிருஷ்ணன் துப்பிவிட்டார்.

அரை விரலோடு குமாரை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குமாரின் வெட்டுப்பட்டவிரலுக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+