ரத்தத்தை வீணாக்காதீர்... அதிருப்தியாளர்களுக்கு இளங்கோவன் அறிவுரை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து என்னை நீக்குவதற்காக சிலர் ரத்தக் கையெழுத்து போடுவதாககேள்விப்பட்டேன். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு ரத்தத்தை வீணாக்க வேண்டாம் என்று அவர்களைக்கேட்டுக் கொள்கிறேன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இளங்கோவனை தலைவர் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்று அவரது எதிர்ப்பாளர்கள் தீவிமாக வலியுறுத்திவருகின்றனர். ஒரு தரப்பினர் ரத்தத்தில் கையெழுத்துப் போட்டு கட்சித் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம்அனுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து இளங்கோவன் கருத்துத் தெரிவிக்கும்போது:
இதுபோன்ற செயல்களெல்லாம் வீணானவை. இப்படி ரத்தத்தை வீணாக்குவதை விட்டுவிட்டு ஏழை, எளியமக்களுக்கு ரத்ததானம் செய்வதில் அவர்கள் ஈடுபட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலனாவது கிடைக்கும்.
எனவே ரத்தத்தை வீணாக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்அவர்.












Click it and Unblock the Notifications