ராணுவ விமானங்கள் குண்டுவீச்சு: புலிகளின் முகாம் அழிப்பு
கொழும்பு:
இலங்கை வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப் புலிகளின் முகாம்களை விமானப் படை விமானங்கள் குண்டுவீசி அழித்தன.
இதில் அந்த முகாம்கள் பெரும் சேதமடந்ைததாக பைலட்கள் தெரிவித்ததாக விமானப் படை அறிவித்துள்ளது.
நேற்று யாழ்பாணத்தில் உள்ள கொடிகாமம் அருகே பலாலியில் உள்ள விடுதலைப் புலிகளின் பதுங்குக் குழிகள்மீது ராணுவ விமானங்கள் நடத்தின.
இஸ்ரேல் குழு வருகை:
இதற்கிடையே புலிகள் தாக்குதலில் சேதமடைந்த இலங்கை ராணுவ விமானங்களை மீண்டும் பயன்படுத்த முடியுமா,சேதத்தின் அளவு என்ன என்பதை ஆராய இஸ்ரேல் நாட்டு நிபுணர்கள் கொழும்பு வந்துள்ளனர்.
இஸ்ரேலிடமிருந்து தான் கிபிர் ரக குண்டுவீச்சு விமானங்களை இலங்கை வாங்கியது. இந்த விமானங்களைக்கொண்டு தான் புலிகள் மீது இலங்கை தாக்குதல் நடத்தி வந்தது.
கடந்த மாதம் புலிகள் நடத்திய தாக்குதலில் 3 கிபிர் விமானங்கள் பெரும் சேதமடைந்தன என்பதுகுறிப்பிடத்தக்கது.