For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேம்பால ஊழல்: சி.பி.சி.ஐ.டி மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மேம்பால ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்ப்பட்டிருந்த சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின்உள்ளிட்ட 7 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட போது, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதிஅசோக்குமார் கூறிய கருத்துக்களை நீக்க வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பைசென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒத்தி வைத்தார்.


சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் செய்ததாக சென்னை நகர மேயர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலர்கைது செய்யப்பட்டனர்.

ஸ்டாலினையும் மேலும் 7 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்த சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதிஅசோக்குமார், ஊழல் வழக்கில் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட விதம் உள்ளிட்டபல விஷயங்களில் சி.பி.சி.ஐ.டி. நடந்து கொண்ட விதத்தைக் கண்டித்திருந்தார்.

இந்த கருத்துக்களை நீக்க வேண்டும் என்று கோரி சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்,

இந்த மனுவுக்கு நீதிபதி அசோக்குமார் விரிவான பதிலை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் மீண்டும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது இந்த மனு. இரு தரப்பு வாதங்களையும் கேட்டசென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியன் இந்த மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைப்பதாக கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X