ஜெ.க்கு எதிரான சாட்சி நீதிமன்றத்தில் மயக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தவழக்கில் சாட்சியம் அளித்த வங்கி அதிகாரி,திடீரென மயங்கி விழுந்ததால் குறுக்கு விசாரணை தடைபட்டது.
முதலாவது தனிக்கோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வருகிறது. இதில் தற்போது குறுக்கு விசாரணை நடந்து வருகிறது.வங்கி அதிகாரி வித்யாசாகர் என்பவரும் இதில் ஒரு சாட்சியம்.
புதன்கிழமை இவரிடம் குறுக்கு விசாரணை நடந்தபோது, திடீரென வித்யாசாகர் மயங்கி விழுந்தார்.
இதனால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டு, வித்யாசாகர் ஓய்வு எடுக்கஅனுமதிக்கப்பட்டார்.
இந்த சூழ்நிலையில், வழக்கு விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதி ஆறுமுகப்பெருமாள்ஆதித்தன் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications