முதியவர் முழுங்கிய பல்செட்: ஆபரேஷன் மூலம் அகற்றம்
கோயம்புத்தூர்:
தன்னுடைய பல்செட்டைத் தவறுதலாக முழுங்கிய நோயாளிக்கு 4 மாதங்களுக்குப் பின் டாக்டர்கள் ஆபரேஷன்செய்து அதை அகற்றினார்கள்.
ஆனால், தன்னுடைய பல் செட்டைத் தவறுதலாக முழுங்கி, பின் ஆபரேஷன் மூலம் அது அகற்றப்பட்ட வினோதநிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது.
கோவையைச் சேர்ந்தவர் பழனிச்சாமி என்ற 60 வயது முதியவர். இவர் 4 மாதங்களுக்கு முன்பு தன்னுடையபல்செட்டை தவறுதலாக விழுங்கி விட்டார்.
ஆனால், இதனால் சாப்பிடுவதற்கு அவருக்குக் கொஞ்சம் கூட கஷ்டம் ஏற்படவில்லை. எனவே, அவர் அதைக்கண்டு கொள்ளவே இல்லை.
அதற்கப்புறம்தான் பிரச்சனையே ஆரம்பித்திருக்கிறது. கடந்த சில நாட்களாக சாப்பிட முடியாமலும்,நெஞ்சுவலியாலும் அவதிப்பட்டு வந்திருக்கிறார். அதன் பிறகே டாக்டரிடம் ஓடியிருக்கிறார்.
சோதனை செய்து பார்த்ததில், அவருடைய நுரையீரல் இடுக்கில் அந்தப் பல்செட் "பத்திரமாக" தங்கியிருப்பதைக்கண்டுபிடித்தார் டாக்டர் பழனிவேலு. இதனால், நுரையீரலின் சவ்வுப் பகுதி அரிக்கப் பட்டிருப்பதையும் அவர்கண்டுபிடித்தார்.
ஆபரேஷன் செய்து அதை அகற்ற டாக்டர் முடிவெடுத்தார். பிறகு அந்தப் பெரியவரின் வலதுபக்க மார்பில் 3துளைகள் ஏற்படுத்தப்பட்டு, அந்தப் பல்செட் அகற்றப்பட்டது.
ஆபரேஷன் செய்த மறுநாளே அந்தப் பெரியவர் நன்றாக நடக்க ஆரம்பித்து விட்டதாக டாக்டர் பழனிவேலுதெரிவித்தார்.