குற்றச்சாட்டுக்கு கருணாநிதி மறுப்பு
சென்னை:
மனநலக் காப்பகங்கள் மூடப்படுவதை மன நோயாளிகளின் உறவினர்கள் விரும்பவில்லை. அதனால்தான்,எங்கள் அரசு மனநலக் காப்பகங்களை மூடவில்லை என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக ஆட்சிக் காலத்திலேயே, அப்போதைய அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, ரகுமான்கான் ஆகியோரைஏர்வாடிக்கு அனுப்பி வைத்தேன். பின்பு அதற்கு ஒரு கமிட்டியும் நியமித்தேன்.
தனியார் மனநல காப்பகங்களை தடை செய்ய வேண்டும் என்று அரசுக்கு அந்த கமிட்டி சிபாரிசு செய்தது.
நாங்களும் அந்த மனநல காப்பகங்களை தடை செய்ய முடிவு செய்தோம். ஆனால், அங்கு சிகிச்சை பெறும் மனநலநேயாளிகளின் உறவினர்கள் அந்தக் காப்பகங்களை தடை செய்வதை விரும்பவில்லை.
அந்த மண்ணில் அவர்கள் சிகிச்சை மேற்கொண்டால்தான் மனநலம் குறைந்தவர்கள் குண்மாவார்கள் என்றநம்பிக்கை அவர்களிடம் இருந்தது. எவ்வளவோ முயற்சி கொண்டும் மனநல காப்பகங்களை தடுக்கமுடியவலில்லை.
இதற்கும் திமுகதான் குற்றவாளியா என்றார் கருணாநிதி.