காங்கிரசை த.மா.காவிடம் அடகு வைக்க மாட்டேன்: இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காங்கிரசை ஒரு போதும் தமிழ் மாநில காங்கிரசிடம் அடகு வைக்க மாட்டேன் என்று தமிழக காங்கிரஸ் கட்சிதலைவர் இளங்கோவன் கூறி உள்ளார்.

சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காங்கிரசை, த.மா.காவிடம் அடகு வைத்து விட்டதாக என்னை எதிர்த்து வரும் எதிர் அணியினர் என் மீது குற்றம்கூறி வருகின்றனர். அது போன்ற ஒரு காரியத்தை நான் என்றும் செய்ய மாட்டேன்.

காங்கிரசில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று என்னை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று போராடிவருகிறார்கள். இது தினமும் பத்திரிக்கைகளில் வெளியாகி வருகிறது.

கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு 15 சீட்டுகள் பெறுவதற்காக நான் மூப்பனார் வீட்டில் தவம் இருந்ததாகஅன்பரசு கூறி உள்ளார். தன் ஆதரவாளர்களுக்கு ஒரு சீட் பெறுவதற்காக நாள் முழுவதும் மூப்பனார் வீட்டில் தவம்இருந்ததை அவர் மறந்திருக்க மாட்டார்.

நான் தனிப்பட்ட யாரைக் குறித்தும் கட்சி தலைமையிடம் புகார் கூறியது இல்லை. அ.தி.மு.க. கூட்டணிக்கு குந்தகம்விளைவிப்பதாக என் மீது எதிர் அணியினர் குற்றம் கூறி வருகின்றனர். கூட்டணி விஷயத்தில் கட்சி மேலிடம்எடுக்கம் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்.

வரும் 16ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியின் பணிகள் பற்றி மக்களிடம் எடுத்துச்சொல்வேன். இனியும் என்னை எதிர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கட்சி மேலிடத்தை வலியுறுத்தமாட்டேன் என்று இளங்கோவன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+