விநாயகர் சதுர்த்தி விழாக்குழு முதல்வரிடம் கோரிக்கை
சென்னை:
தமிழகத்தில் நடக்கவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இந்துமுன்னணியைச் சேர்ந்த விநாயகர் சதுர்த்தி விழா ஒருங்கிணைப்பாளரான வி. முரளி தமிழக முதல்வரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மாதம் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிறது இதையொட்டி 22ம் தேதி முதல் 26ம் தேதிவரைவிநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும்.
கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்துக்கள் அடக்கி வைக்கப்பட்டார்கள். இந்துக்களுக்கான உரிமைகள் மீண்டும்கிடைக்க முதல்வர் வழி வகுக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி விழா ஒருங்கிணைப்பு குழுவில் இருப்பவர்கள் மீது போதைப் பொருள் கடத்தல் வழக்குபோன்றவை போடப்படும் என்று கடந்த ஆட்சி காலத்தில் மிரட்டல் விடப்பட்டது. அது போல் மிரட்டல்விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும், இந்த விழாவிற்கு தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறோம்என்று அந்த அறிக்கையில் முரளி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications