ராமகோபாலனின் "நரசிம்மா" டயலாக்
திருச்சி:
நரசிம்மா படத்தில் நடிகர் விஜயகாந்த் ஒட்டுமொத்த இந்துக்களின் உணர்வை பிரதிபலித்துள்ளார் என்று கூறினார்.
அதில் முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு எதிராக தனது வழக்கமான பாணியில் ஒரு நீண்ட டயலாக் பேசுவார்.
அப்போது, முஸ்லீம் நாடுகளில் (குறிப்பாக பாகிஸ்தானில்) ஒரு இந்து மத்தைச் சேர்ந்தவன் சாதாரண கிரிக்கெட்வீரனாக கூட இருக்கமுடியாது. ஆனால், முஸ்லீம் ஒருவரை கேப்டனாகவே வைத்திருந்த நாடு இந்தியா என்பார்.
திருச்சியில் நடந்த விழா ஒன்றில் அதை எடுத்துக்காட்டி இந்து முன்னனி அமைப்பாளர் இராமகோபாலன்பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
சில வக்கிரபுத்தி கொண்டவர்கள் முதல்வர் ஜெயலலிதா பிராமணர் என்பதால் நான் அவரை ஆதரிப்பதாகச்சொல்லி வருகிறார்கள்.
இன்றைக்கு தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் ஜாதிச் சாயம் பூசப்படும் சாபக்கேடு ஏற்பட்டுள்ளது.
சுதந்திரத்துக்காக உழைத்தவர்களைக் கூட ஜாதிப் பின்னணியில் பார்க்கிறார்கள். இதை நான் வண்மையாகக்கண்டிக்கிறேன்.
மேலும், சுதந்திரத்திற்குப் பிறகு வந்த முதல்வர்களில் ஜெயலலிதாதான் இந்துக் கோயில்களுக்கு அதிக நற்பணிகள்செய்திருக்கிறார்.
கருணாநிதியைப் பொருத்தவரையில் இந்துக்களின் ஓட்டு மட்டுமே அவருக்கு குறி. அதற்காக அவ்வப்போது சிலதிட்டங்களை அறிவிப்பார்.
ஜெயலலிதா மட்டும்தான் உண்மையான பக்தியோடு செயல்பட்டு வருகிறார்.
நரசிம்மா படத்தில் ஒரு டயலாக் வரும். அதில் விஜயகாந்த், இந்தியாவில் உயர் பதவிகளில் எத்தனையோசிறுபான்மையினர் இருக்கிறார்கள். ஆனால், இஸ்லாமிய நாட்டில் ஒரு சிறு பதவியில் கூட இந்துக்கள் இல்லைஎன்று கூறுவார், அது அவருடைய உணர்வு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்துக்களின் உணர்வும் அதுதான்.
இவ்வாறு இராமகோபாலன் பேசினார்.












Click it and Unblock the Notifications