159 வயது பிரசிடென்ஸி காலேஜ் கட்டிடங்களுக்கு ஆபத்து
சென்னை:
சென்னையில் உள்ள பழம்பெரும் கல்லூரிகளில் ஒன்றான மாநிலக் கல்லூரியின் கட்டிடங்கள் இன்னும் சிலவருடங்களில் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக அந்தக் கல்லூரியின் முதல்வர் நடராஜன் கூறினார்.
ஆங்கிலத்தில் "பிரசிடென்ஸி காலேஜ்" என்று அழைக்கப்படும் மாநிலக்கல்லூரி தொடங்கப்பட்டு 159 ஆண்டுகள்ஆகின்றன.
இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டம் கல்லூரி வளாகத்தில் நடந்தது.கூட்டத்தில் நீதிபதி எஸ்.மோகன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நடிகர் தாமு மற்றும் பலர் உறுப்பினராகத்தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கல்லூரி முதல்வர் நடராஜன் கூறியதாவது:
மாநிலக்கல்லூரி தொடங்கப்பட்டு 159 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த சிலநாட்களுக்கு முன்பு இதன் கட்டிடங்களின்நிலைத்தன்மை பற்றி ஆய்வு செய்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அதிர்ச்சியூட்டும் தகவலைத் தந்துள்ளது.
அதாவது, இன்னும் 10 ஆண்டுகளில் மாநிலக் கல்லூரியின் கட்டிடங்கள் எல்லாம் இடிந்து தரைமட்டம் ஆகும்அபாயம் இருக்கிறது என்று அறிவித்துள்ளது. இதனை தடுத்து நிறுத்த குறைந்தது, ரூ.3 கோடியாவது தேவைப்படும்என்றார் நடராஜன்.