For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்லையில் பாகிஸ்தானின் சுதந்திர தின சண்டை

By Staff
Google Oneindia Tamil News

ஜம்மு:

இந்தியாவின் சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. பாகிஸ்தான் சுந்திரதினத்தை இன்று கொண்டாடியது.

இந்நிலையில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் கடும் சண்டை நடந்து வருகிறது.பாகிஸ்தான் படைகள் இந்திய படைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்தியவீரர்களும் திருப்பி சுட்டனர்.

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதில் குறித்து இந்திய ராணுவ அதிகாரிகள்கூறியதாவது:

ஜம்மு -காஷ்மீரில் உள்ள 39 எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்நடத்தியது. பொதுமக்கள் வாழும் பல பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்தியது.

திங்கள்கிழமை இரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜோப்பால் என்ற இடத்தில் இந்தியராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் சுட்டதில் 1 எல்லைப் பாதுகாப்புப்படை வீரர் உள்ளிட்ட 2 பேர் காயமடைந்தனர்.

விட்டல் என்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் படுகாயமடைந்தார். அவர் ராணுவமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த பொதுமக்களில் ஒருவரும் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் ஜம்முவின் அக்னூர் மற்றும் ஆர்.எஸ். புரா பகுதிகள்மீதும் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர். ஆனால் இதில் உயிரிழப்புஎதுவும் ஏற்படவில்லை.

தோடா மாவட்டத்தில் கண்ணிவெடி வெடித்ததில் ராணுவ வீரர் ஒருவர்கொல்லப்பட்டார். மேலும் கூலா கிராமத்தில் ராணுவ வாகனத்தில் வீரர்கள் சென்றுகொண்டிருந்த போது தீவிரவாதிகள் ரிமோட் கன்ட்ரோல் மூலம் கண்ணி வெடியைவெடிக்கச் செய்தனர். இதில் நடராஜன் என்ற ராணுவ வீரகும் ராஜு என்ற வீரரும்காயமடைந்தனர்.

காயமடைந்த ராணுவ வீரர்கள் உதம்பூர் ராணுவ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புரா சப்-செக்டர் எல்லை பகுதியில் தீவிரவாதிகளுக்கும்,ராணுவத்திற்கும் இடையேநடந்த சண்டையில் ஒரு எல்லை பாதுகாப்பு படை வீரர், 1 சப்-இன்ஸ்பெக்டர்உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.

உ.பியில் தீவிரவாதிகள் திட்டம் முறியடிப்பு:

சுதந்திர தின விழாவை குலைக்க திட்டமிட்டிருந்த லக்ஷார்-இ- தொய்பா தீவிரவாதிஇயக்கத்தைச் சேர்ந்தவர்களின் திட்டத்தை கண்டுபிடித்து லக்னோ நகர போலீசார்முறியடித்தனர். 2 தீவிரவாதிளையும் கைது செய்துள்ளனர். . 1 தீவிரவாதிகொல்லப்பட்டார்.

தீவிரவாதிகளிடமிருத்து ஏராளமான வெடிமருத்துகளும் வெடி பொருட்களும்பறிமுதல் செய்யப்ப்டடது.

தீவிரவாதிகளிடம் விசாரணை செய்த போது, இம்ரான் என்ற ஏரியா கமாண்டர்தலைமையில் சுதந்திர தினத்தன்று லக்னோவின் முக்கியமான பகுதிகளில் குண்டு வைக்கதிட்டமிருந்தது தெரிய வந்தது.
கடந்த மே மாதம் அயோத்தியாவில் ஜீப் ஒன்றில் வெடி குண்டு வைத்ததும்இவர்கள்தான் என்று தெரியவந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X