திமுக எம்பிக்கள் அமளி: இன்றும் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தி.மு.க. நடத்திய கண்டன பேரணியின் போது தி.மு.க. தொண்டர்களை போலீசார்தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. எம்.பிக்கள் ரகளை செய்த காரணத்தால் 2வது நாளாகசெவ்வாய்க்கிழமையும் லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஒத்தி வைக்கப்பட்டன.

காலை 11 மணிக்கு ராஜ்யசபா கூடியதும் தி.மு.க. எம்.பிக்கள் விடுதலை விரும்பியின் தலைமையில்தி.மு.க.எம்.பிக்கள் ரகளிையில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் ராஜ்யசபாவின் மத்திய பகுதிக்கு சென்றுதி.மு.க. தொண்டர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை எதிர்த்து கோஷம் எழுப்பினர்.

மத்திய நாடாளுமன்ற இணை அமைச்சர் ஓ.ராஜகோபாலன் தி.மு.க. எம்.பிக்களை சமாதானம் செய்ய முயன்றார்.ஆனால் தி.மு.க. எம்.பிக்கள் சமாதானம் அடையாமல் தொடர்ந்து கோஷம் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

இதையடுத்து ராஜ்யசப அவைத் தலைவர் கிருஷ்ணகாந்த் ராஜ்யசபாவை நாள் ஒத்தி வைத்தார். 2வது நாளாகஅலுவல்கள் எதையும் கவனிக்காமல் ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.

தி.மு.க. எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக லோக்சபாவும் இன்று ஒத்தி வைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+