திமுக எம்பிக்கள் அமளி: இன்றும் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தி.மு.க. நடத்திய கண்டன பேரணியின் போது தி.மு.க. தொண்டர்களை போலீசார்தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. எம்.பிக்கள் ரகளை செய்த காரணத்தால் 2வது நாளாகசெவ்வாய்க்கிழமையும் லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஒத்தி வைக்கப்பட்டன.
மத்திய நாடாளுமன்ற இணை அமைச்சர் ஓ.ராஜகோபாலன் தி.மு.க. எம்.பிக்களை சமாதானம் செய்ய முயன்றார்.ஆனால் தி.மு.க. எம்.பிக்கள் சமாதானம் அடையாமல் தொடர்ந்து கோஷம் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.
இதையடுத்து ராஜ்யசப அவைத் தலைவர் கிருஷ்ணகாந்த் ராஜ்யசபாவை நாள் ஒத்தி வைத்தார். 2வது நாளாகஅலுவல்கள் எதையும் கவனிக்காமல் ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.
தி.மு.க. எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக லோக்சபாவும் இன்று ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications