ராஜகோபாலனை உடனே அனுப்ப மத்திய அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேசிய பாதுகாப்புப் படையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழக டி.ஜி.பி. டாக்டர் ஆர்.ராஜகோபாலனை உடனடியாக மத்திய பணிக்கு அனுப்பி வைக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு மீண்டும்கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ராஜகோபாலன் மற்றும் சென்னை நகர கமிஷனர் முத்துக்கருப்பன், இணை ஆணையர் ஜார்ஜ், துணை ஆணையர்கிறிஸ்டோபர் நெல்சன் ஆகியோரை மத்திய பணிக்கு அனுப்பி வைக்குமாறு கூறி மாநில அரசுக்கு மத்திய அரசுசமீபத்தில் கடிதம் எழுதியிருந்தது.

ஆனால் இவர்களை மத்திய பணிக்கு அனுப்பி வைக்க முடியாது. ராஜகோபாலனின் சேவை தமிழக அரசுக்குத்தேவை என்று கூறி தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது. ஆனால், தமிழக அரசின் விளக்கத்தை மத்திய அரசுநிராகரித்து விட்டது.

இதைத் தொடர்ந்து, உடனடியாக ராஜகோபாலனை மத்திய பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழகஅரசுக்கு மீண்டும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிகிறது. இம்முறை இந்தக் கடிதம் கண்டிப்புடன்கூடியதாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், முத்துக்கருப்பன், ஜார்ஜ், கிறிஸ்டோபல் நெல்சன் ஆகியோரையும் மத்திய பணிக்கு அனுப்பிவைப்பதற்கு நாளை (புதன்கிழமை) வரை தமிழக அரசுக்கு மத்திய அரசு காலக்கெடு விதித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+