லாரி டயர்களில் நசுங்கி புதுப்பெண் சாவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருமணம் நிச்சயிக்கப்பட்டவருடன் மோட்டார் பைக்கில் சென்ற பெண் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாகஇறந்தார்.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் நந்தினி. இவருக்கும், அடையாறு பகுதியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன்என்பவருக்கும் வீட்டில் திருமணம் நிச்சயம் செய்தனர்.

திருமண நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு பெற்றோரின் அனுமதியுடன் நந்தினியும், முரளி கிருஷ்ணனும்சினிமாக்களுக்கும், கடற்கரைக்கும், பிற நிகழ்ச்சிகளுக்கும் சென்று வந்தனர்.

வழக்கம் போல இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, வேளச்சேரி மெயின் ரோட்டில் எமனாக வந்தஒரு டிப்பர் லாரி இவர்களது பைக் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்திலேயே நந்தினி லாரியின்டயர்களில் சிக்கி பலியானார். முரளிகிருஷ்ணன் படுகாயமடைந்தார்.

உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்ததும் நந்தினியின் வீட்டினரும், முரளிகிருஷ்ணனின் வீட்டினரும் விரைந்து வந்தனர்.

மணக் கோலம் காண வேண்டிய மகள் பிணமாக கிடப்பதைப் பார்த்து அவர்கள் கதறிய கதறல், அக்கம் பக்கத்தில்இருந்தோரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+