For Daily Alerts
Just In
டெல்லி ரயிலில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி
சென்னை:
ரிஷிகேஷில் இருந்து டெல்லி சென்றுகொண்டிருந்த ரயிலில் குண்டு வெடித்ததில் 3 பேர் பலியானார்கள், 35 பேர்காயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, நேற்று மாலை (செவ்வாய்கிழமை) ரிஷிகேஷில் இருந்து டெல்லியை நோக்கி ரயில்வந்துகொண்டிருந்தபோது, உத்திரபிரதேச மாநிலம் முரத்நகர் அருகே அந்த ரயிலின் 2 -வது பெட்டியில் திடீரெனஒரு குண்டு வெடித்தது.
இதில், சம்பவ இடத்திலேயே ஒருவரும், மருத்துவமனையில் 2 பேரும் பலியானார்கள். மேலும் 35 பேர் படுகாயம்அடைந்தனர். இவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதுபற்றித் தகவலறிந்ததும் அதிகாரிகள், மருத்துவக்குழு மற்றும் போலீசார் விரரைந்து சென்று தேவையானநடவடிக்கைகளை கவனித்தனர்.
இந்த நாசவேலை தீவிரவாதிகளின் சதித்திட்டமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]