For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி ரயிலில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ரிஷிகேஷில் இருந்து டெல்லி சென்றுகொண்டிருந்த ரயிலில் குண்டு வெடித்ததில் 3 பேர் பலியானார்கள், 35 பேர்காயமடைந்தனர்.

இன்று நாடு முழுவதும் சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது. இதை சீர்குலைத்து குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்என்று தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தெற்கு டெல்லியில் ஒருஆட்டோவில் குண்டு வெடித்தது. இதில் 2 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக யாரும் பலியாகவில்லை.

இதைத்தொடர்ந்து, நேற்று மாலை (செவ்வாய்கிழமை) ரிஷிகேஷில் இருந்து டெல்லியை நோக்கி ரயில்வந்துகொண்டிருந்தபோது, உத்திரபிரதேச மாநிலம் முரத்நகர் அருகே அந்த ரயிலின் 2 -வது பெட்டியில் திடீரெனஒரு குண்டு வெடித்தது.

இதில், சம்பவ இடத்திலேயே ஒருவரும், மருத்துவமனையில் 2 பேரும் பலியானார்கள். மேலும் 35 பேர் படுகாயம்அடைந்தனர். இவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதுபற்றித் தகவலறிந்ததும் அதிகாரிகள், மருத்துவக்குழு மற்றும் போலீசார் விரரைந்து சென்று தேவையானநடவடிக்கைகளை கவனித்தனர்.

இந்த நாசவேலை தீவிரவாதிகளின் சதித்திட்டமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X