For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேரணி வன்முறை: இளங்கோவன் வருத்தம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக நடத்திய பேரணியின்போது வன்முறை ஏற்பட்டதும், 5 உயிர்கள் பலியானதும் வருத்தம் அளிப்பதாககாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.

திமுக பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை குறித்து இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:

திமுக நடத்திய பேரணியைத் தொடர்ந்து நடந்த வன்முறையும், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர்இறந்ததும் ஒரு எம்எல்ஏ இறந்ததும், வருத்தமும் வேதனையும் தருகிறது.

ஊர்வலத்தில் வந்தவர்கள் ஆபாசமாக பேசினார்கள் என்ற தகவலும் வருத்தம் தருகிறது. இது அரசியல் நாகரிகம்அல்ல. இதுபோன்ற வார்த்தைகளை கட்சியினர் யாரும் பயன்படுத்தக் கூடாது.

மேலும், இந்த சம்பவத்தில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதும் வருத்தமாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள்எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X