For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பயங்கரவாதத்தை நசுக்குவோம்: வாஜ்பாய் சூளுரை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பாகிஸ்தான் ஆதரவுடன் நடந்து வரும் எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை இந்தியா நசுக்கி ஒடுக்கும் எனசுதந்திரதின விழாப் பேருரையில் பிரதமர் வாஜ்பாய் கூறினார்.

டெல்லியில் இன்று (புதன்கிழமை) 55 -வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.

இதில் கலந்துகொண்ட பிரதமர் வாஜ்பாய், வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் தேசியக்கொடியைஏற்றிவைத்துச் சிறப்புரையாற்றினார்.

அவரது உரையில் காஷ்மீர் பிரச்சனை, பாகிஸ்தானின் எல்லைதாண்டிய பயங்கரவாதம் மற்றும் பல்வேறுநலத்திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

அதன் விவரம் வருமாறு,

காஷ்மீர் பற்றிய பாகிஸ்தானின் கருத்தை ஏற்கவே முடியாது. இருப்பினும், இந்திய-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைதொடர வேண்டும் என்று விரும்புகிறோம்.

காஷ்மீரில் தீவிரவாதிகளைத் தூண்டிவிட்டு, அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதற்கு "ஜிகாத்" என்றும்"சுதந்திரப் போர்" என்றும் பாகிஸ்தான் சொல்லி வருவது மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாகிஸ்தான்ஆதராவோடு இதில் ஈடுபட்டு வருபவர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளுக்கும், மனிதத்தன்மைக்கும் எதிராகசெயல்பட்டு வருகிறார்கள்.

கடந்த சில வாரங்களாக அமர்நாத், கிஷ்ட்வார், தோடா மற்றும் ஜம்மு போன்ற பகுதிகளில் அப்பாவி மக்கள் மீதுஅவர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் செய்து வருவதில் புனிதம் எங்கே இருக்கிறது?. இது என்ன சுதந்திரப் போராட்டம்? யாருக்காகஅவர்கள் இதைச் செய்கிறார்கள்?. இந்நிலை நீடித்தால் அதை எந்த நசுக்கி ஒடுக்க இந்தியா தயாராக உள்ளது.

மேலும், பாகிஸ்தான் போரிட விரும்பினால் அவர்கள் ஏன் ஏழ்மைக்கு எதிராகவும், வேலையில்லாத்திண்டாட்டத்தைப் போக்கவும், நோய்நொடிகளைப் போக்கவும் போராடக் கூடாது?

இரண்டு நாடுகளும் தங்களுக்கிடையில் உள்ள வேறுபாடுகளை நீக்கி வாணிபம், பொருளாதாரம் மற்றும் மக்கள்தொடர்பில் அக்கரை செலுத்த வேண்டும். அது தான் இந்த துணைக் கண்டத்துக்கும் எதிர்கால சந்ததிகளுக்கும்நல்லது.

மேலும் ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் வாழும் மக்களின் துன்பங்களையும், வலிகளையும் போக்கமுயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். மக்கள் யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம்.

காஷ்மீரில் அமைதியான மற்றும் நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்படும்.

இவ்வாறு வாஜ்பாய் கூறினார்.

மேலும் பிரதமர் தனது உரையில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X