இன்று கூடுகிறது தமிழக சட்டசபை
சென்னை:
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வியாழக்கிழமை துவங்குகிறது. பட்ஜெட் 18ம் தேதி தாக்கல்செய்யப்படுகிறது.
தி.மு.க தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்ட பிறகு அரசியல் களம் படு அனலாக உள்ளது. அதைத் தொடர்ந்துதி.மு.க நடத்திய பேரணியில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்ததும், எரிகிற நெருப்பில்எண்ணையை விட்டது போல உள்ளது.
மேலும், கடந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி இப்போது அங்கிருந்து விலகிதி.மு.க ஆதரவு கட்சியாக மாறியுள்ளது.
எனவே கருணாநிதி கைது விவகாரத்தை பெரிய பிரச்சினையாக்க தி.மு.க முயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பா.ம.க. ஆதரவுடன் சபையை ஸ்தம்பிக்க வைக்கவும் தி.மு.கவினர் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த முறை தி.மு.கவினர் மிகவும் அமைதியாக நடந்து கொண்டார்கள். வந்ததும், போவதும் தெரியாதவண்ணம் தி.மு.கவினரின் செயல்பாடுகள் இருந்தன. ஆனால் இப்போது அவர்கள் கொந்தளிப்பின் உச்சகட்டத்தில்உள்ளனர். எனவே கூட்டத் தொடர் பல்வேறு சம்பவங்களைக் கொண்டதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இதற்கிடையே, வியாழக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதுஅது மாற்றப்பட்டு 18ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
தி.மு.க எம்.எல்.ஏ. வை.பெருமாளின் திடீர் மறைவையடுத்து சபை கூடியதும் அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுஒத்திவைக்கப்படும். மீண்டும் வெள்ளிக்கிழமைதான் கூட்டம் நடக்கும்.












Click it and Unblock the Notifications