அரைக்கம்பத்தில் கொடியேற்றிய பாஜக
சென்னை:
சென்னையில் உள்ள தமிழக பாரதிய ஜனதா தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடந்த சுதந்திர தின விழாகொண்டாட்டத்தின்போது, தேசிய கொடி அரைக்கம்பத்தில் ஏற்றி கொண்டாடப்பட்டதற்கு கடும் எதிர்ப்புஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பா.ஜ.கவின் தமிழக தலைவர் கிருபாநிதி, கட்சி அலுவலகத்தில் தேசிய கொடியைஏற்றி வைத்தார். ஆனால் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க வைத்து தேசிய கீதம் பாடப்பட்டது.
இந்த விழாவில் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். அரைக் கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டுபா.ஜ.கவினர் சுந்திர தினம் கொண்டாடியதை பார்த்து அந்த வழியாக சென்ற மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பா.ஜ.கவினர் தேசிய கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டதை கண்டித்தும், அவர் தேசிய கொடியைஅவமரியாதை செய்ததாக கூறி அதை கண்டித்தும் புதன்கிழமை மாலை அகில இந்திய ஜனநாயக வாலிபர்சங்கத்தை சேர்ந்தவர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications