சிங்கப்பூரிலிருந்து இந்தியரைக் கடத்தியவர் கைது
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் இருந்து இந்தியர் ஒருவரை அந்த நாட்டைவிட்டு போலீசாருக்கு தெரியாமல் கடத்த முயன்றசிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, அதிகாரிகள் அந்த வேனைத் துரத்திப் பிடித்தனர். அதில் டிரைவர் தவிர மற்றொரு நபர் மறைத்துவைக்கப்பட்டிருந்தார்.
வேனில் கடைசியில் உள்ள சீட்களைக் கழற்றிவிட்டு, வேனின் பக்கவாட்டில் 2 ஓட்டைகளைப் போட்டு அதற்குள்அந்த மனிதர் வைக்கப்பட்டிருந்தார். இந்த துளைகள் உள்ளே இருக்கும் மனிதருக்கு காற்றோட்டம் மற்றும் சுவாசவசதிக்காப் போடப்பட்டுள்ளன.
விசாரணையில், மறைத்துவைக்கப்பட்டிருந்த நபர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
ஆட்களை கடத்துவது நிரூபிக்கப்பட்டால், சிங்கப்பூர் நாட்டுச் சட்டப்படி அந்த டிரைவருக்கு 5 ஆண்டு ஜெயில்தண்டனையும் 3 பிரம்படிகளும் வழங்கப்படும்.
கடத்தப்பட்ட அந்த இந்தியரின் சிங்கப்பூர் குடியேற்ற உரிமை மீதும் தற்போது போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.அவருடைய குடியேற்ற உரிமை நிரூபிக்கப்படாவிட்டால், அவருக்கு 6 மாத ஜெயில் தண்டனையும், சிங்கப்பூரின்வழக்கப்படி பிரம்படி அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications