ஆட்டோ கட்டணத்தை உயர்த்த டிரைவர்கள் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகரில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை குறைந்தபட்சம் ரூ.10 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று முதல்வர்ஜெயலலிதாவுக்கு ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெட்ரோல் விலை பலமுறை உயர்ந்தும் கூட ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளது. எனவேகுறைந்தபட்சம் ரூ.10 என்றும் கிலோ மீட்டருக்கு ரூ.5 உயர்த்தியும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும்.
கால் டாக்சிகள் என்ற பெயரில் முறையாக அனுமதி பெறப்படாமல் பல டாக்சிகள் நகரில் ஓடி வருகின்றன.
இதனால் பொதுமக்களுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இவற்றை உடனடியாகதடை செய்து ஆட்டோ டிரைவர்களுக்கு உதவ வேண்டும் என்று அந்த அறிக்கையில் குமார் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications