நக்சலைட்டுகள் கைவரிசையா?
காட்பாடி:
காட்பாடி வெடிவிபத்தில் நக்சலைட்டுகள் தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
வெடிவிபத்துக்கான காரணம் குறித்த போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். விபத்து நடந்தபோது இங்குமொத்தம் 34 பேர் வேலை பார்த்துக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்தில் இறந்தவர்கள் 29 பேர். இவர்களுடைய உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. மேலும் 4 பேர் காயமடைந்துமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஒருவர் யார் என்று தெரியவில்லை. இவர் ஆந்திர நக்சலைட்டாகஇருக்கலாம் எனவும், தொழிலாளி போல உள்ளே வந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
காட்பாடி ஆந்திர மாநிலத்திற்கு மிக அருகில் உள்ள ஊர். ஆந்திர மாநிலத்தில் நக்சலைட்டுகள் அட்டகாசம் அதிகம் உள்ளது.மேலும் அங்கு தற்போது பஞ்சாயத்துத் தேர்தல் நடந்து வருகிறது.
எனவே நக்சலைட்டுகள், தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களைப் பயன்படுத்தி டெட்டனேட்டர்களைக் கடத்தவோஅல்லது திருடவோ முயற்சித்திருக்கலாம். அந்த முயற்சியின்போது டெட்டனேட்டர்கள் வெடித்திருக்கலாம் என்றும் போலீஸார்சந்தேகிக்கிறார்கள்.
இந் நிலையில் ஆந்திர மாநில போலீசாரும் காட்பாடிக்கு வந்து குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.