வடபழனி கோவில் பணத்துடன் ஊழியர் எஸ்கேப்
சென்னை:
சென்னை வட பழனி கோவில் உண்டியல் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தபோதுஒரு பணக் கட்டை எடுத்துக் கொண்டு கோவில் ஊழியர் ஒருவர் ஓடி விட்டார்.அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவில் நிர்வாக உதவி ஆணையர் முன்னிலையில் நடந்து கொண்டிருந்த இந்தப்பணியின்போது ராமச்சந்திரன் என்ற ஊழியர் குவித்து வைக்கப்பட்டிருந்த பணக்கட்டுக்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு திடீர் என அங்கிருந்து ஓடினார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற ஊழியர்கள் அவரைப் பிடிக்க முயற்சித்தனர். ஆனால்அவர் சிக்கவில்லை.
இதுகுறித்து வடபழனி போலீஸ் நிலையத்தில் கோவில் உதவி ஆணையர் புகார்கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஆனால் வடபழனி கோவிலில் இதுபோன்று எஸ்கேப் நடப்பது புதிதல்லவாம்.அடிக்கடி நடக்குமாம். ஆனால் இதுவரை தவறு செய்யும் ஊழியர்கள் மீது சரியானநடவடிக்கை எடுக்காததால் இப்படி பணத்துடன் அடிக்கடி ஊழியர்கள்தலைமறைவாவது தொடர்வதாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் புகார் கூறினர்.












Click it and Unblock the Notifications